என்னை பாதித்த சில நிகழ்வுகள்
இது முழுமையான, தெளிவான, திறமையான படைப்பாளியின் படைப்புகள் அல்ல, மேற்சொன்னவற்றில் ஏதாவது ஒரு திறமையையாவது வளர்த்துக் கொள்ளவேண்டும் என்ற முனைப்புடன் படைக்கும் சிறியவனின் கிறுக்கல்கள்... பெரியோர்கள் மண்ணிக்கவும்!
வியாழன், அக்டோபர் 28, 2010
வெள்ளி, செப்டம்பர் 03, 2010
உமாசங்கருக்கு ஆதரவாக… அரசுக்கு எதிராக…..

உமாசங்கரின் வியக்கத்தக்க உறுதி! கருணாநிதி அரசின் வெறுக்கத்தக்க கயமை!
1995 இல் (ஜெ ஆட்சியில்) மதுரை மாவட்டத்தின் கூடுதல் ஆட்சியராக இருந்தபோது, சுடுகாட்டுக் கூரை ஊழலை வெளிக்கொண்டு வந்தபோதுதான் உமாசங்கர் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஜெயலலிதா ஆட்சியின் ஊழலைச் சொல்லி, 1996 இல் ஆட்சியைப் பிடித்த கருணாநிதி, ஊழல் கண்காணிப்புத் துறையின் கூடுதல் ஆணையராக உமாசங்கரை நியமித்தார். ஜெ, அவரது அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ஊழல்களை உமாசங்கர் வெளிக்கொணர்ந்த போதிலும், செல்வாக்குள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்தது கருணாநிதி அரசு. வெறுப்புற்ற உமாசங்கர், தன்னை இப்பதவியிலிருந்து விடுவிக்குமாறு கோரியவுடனே, அவர் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
மே 2006 இல் எல்காட் என்ற அரசு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டதும், அதுவரை மைக்ரோசாப்ட் மென்பொருட்களைச் சார்ந்திருந்த அரசுத்துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்து பில்கேட்ஸை வெளியேற்றி விட்டு, 2007 ஆம் ஆண்டு முதல் ‘லினக்ஸ்’ என்ற ஓபன் சோர்ஸ் (இலவச) மென்பொருளை அறிமுகப் படுத்தினார் உமாசங்கர்.
“மைக்ரோசாப்ட் ஆத்திரம் கொண்டால் நம் நாட்டின் மென்பொருள் துறையே தேங்கிவிடும் என்று கருதுவது அபத்தமானது… மைக்ரோசாப்ட் இல்லாமல் இந்தியா வாழ முடியும். முன்னேறவும் முடியும். இந்தியா என்ற மிகப்பெரிய சந்தையை இழப்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்குத்தான் பேரிழப்பு. மைக்ரோசாப்டிலிருந்து வெளியேறியதன் விளைவாக தமிழ்நாடு ஆண்டுக்கு 200 முதல் 500 கோடி வரை மிச்சமாக்க முடியும்” என டெக்கான் கிரானிக்கிள் பத்திரிகைக்கு அப்போது அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார் உமாசங்கர். மைக்ரோசாப்டின் உயர் அதிகாரி ஒருவர் தமது மென்பொருள் தொகுப்பை 7000 ரூபாய்க்குத் தருவதாக பேரம் பேசினாரென்றும், ஓபன் சோர்ஸில் செலவே இல்லாமல் தரவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய மென்பொருளுக்கு நாங்கள் எதற்காக 7000 ரூபாய் செலவழிக்கவேண்டும் என்று கூறி அவரைத் திருப்பி அனுப்பியதாகவும் அப்பேட்டியில் கூறுகிறார் உமாசங்கர்.
எல்காட்டின் பொறுப்புக்கு உமாசங்கர் வருவதற்கு சில ஆண்டுகள் முன்னர், தியாகராச -செட்டியார் என்பவருக்குச் சொந்தமான ‘நியூ எரா டெக்னாலஜீஸ்’ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து எல்காட் நிறுவனம், ‘எல்நெட்’ என்றொரு கூட்டுப்பங்கு நிறுவனத்தை உருவாக்கியிருந்தது. 24% பங்குகள் தியாகராச செட்டியாரிடமும், 26% பங்குகள் எல்காட்டிடமும், மீதமுள்ள 50% பங்குகள் பொதுமக்களிடமும் இருந்த இந்நிறுவனம், 2004 ஆம் ஆண்டில், ‘இ.டி.எல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்’ என்ற கட்டுமான நிறுவனத்தைத் தனது துணை நிறுவனமாக உருவாக்கியிருந்தது. சென்னையில் 18 இலட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ.700 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா (கட்டிடம்) ஒன்றை இந்நிறுவனம் உருவாக்கியிருந்தது. தமிழக அரசின் 26% பங்குகளையும் பொதுமக்களின் 50% பங்குகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நிறுவனமும், அதன் 700 கோடி சொத்தும், 24% பங்குளை மட்டுமே வைத்திருந்த தியாகராச செட்டியாருக்கு மர்மமான முறையில் கைமாறியிருப்பதை உமாசங்கர் கண்டுபிடித்தார். “2008, ஜூலை 8 ஆம் தேதியன்று தரமணியில் உள்ள எல்நெட் நிறுவனத்தில் இவை தொடர்பான ஆவணங்களை நானே நேரடியாகத் தேடிக்கொண்டிருந்த போது, என்னுடைய பதவி பறிக்கப்பட்ட தகவல் வந்து சேர்ந்தது” என்று தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் உமாசங்கர்.
அடுத்து, சன் டிவி – கருணாநிதி மோதலின் தொடர்ச்சியாக, அரசு கேபிள் டிவி கார்ப்பரேசனின் நிர்வாக இயக்குநர் பதவியில் அக்டோபர் 2008 இல் நியமிக்கப்பட்டார் உமாசங்கர். அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்களை மிரட்டியதுடன், ரவுடிகளை வைத்து வயர்களையும் அறுத்தெறிந்தனர் மாறன் சகோதரர்கள். இவர்களுக்குத் துணை நின்றவர் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி. இது குறித்து பல புகார்கள் கொடுத்தும் போலீசு நடவடிக்கை எடுக்காததால், இவர்களைத் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் சிறை வைக்கவேண்டும் என்றும், சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தை நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்றும் உமாசங்கர் அரசுக்கு சிபாரிசு செய்திருக்கிறார். உடனே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏவப்படுகிறது. அந்த ஒழுங்கு நடவடிக்கை சட்டவிரோதமானது என்று மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் இடைக்காலத்தடை விதித்ததனால், 2009, சனவரி 23 ஆம் தேதியன்று சிறுசேமிப்புத்துறைக்குத் தூக்கியடிக்கப்பட்டார் உமாசங்கர். இவற்றின் தொடர்ச்சியாக இப்போது வந்திருப்பதுதான் ஊழல் வழக்கும் தற்காலிகப் பணிநீக்கமும்.
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் விதிமுறைகள்
குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கும் ஊழல் தடுப்புச் சட்டத்துக்கும் விரோதமாக, திட்டமிட்டே வடிவமைக்கப்பட்டிருப்பதை அம்பலமாக்கியிருக்கிறார் உமாசங்கர்.
“ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அரசுத்துறை நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் போன்றோர் மீது ஊழல் குற்றத்துக்காக யாரேனும் வழக்கு தொடரவேண்டுமானால், அதற்கு அரசின் முன் அனுமதி தேவை” என்று கூறும் இவ்விதிமுறை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையே கேள்விக்குள்ளாக்குவதோடு, ஊழல் அதிகாரிகளுக்குப் பாதுகாப்புக் கவசமாகவும் பயன்படுகிறது என்கிறார் உமாசங்கர். அனுமதி அளிக்கும் அதிகாரம் முதல்வர் உள்ளிட்ட மூன்று பேர் அடங்கிய குழுவிடம் இருப்பதால், நேர்மையான அதிகாரிகளை மிரட்டுவதற்கும், ஊழல் அதிகாரிகளைத் தப்பவைப்பதற்கும் இது பயன்படுத்தப் படுகிறது என்பதையும் ஆதாரங்களுடன் திரைகிழித்திருக்கிறார் உமாசங்கர்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் கூடுதல் இயக்குநராக 1996 முதல் தான் பணியாற்றிய காலத்தில், கல் குவாரி ஊழல் (1000 கோடி ரூபாய்), சவுத் இந்தியா ஷிப்பிங் கார்ப்பரேசன் தனியார்மயமாக்கல் ஊழல் (200 கோடி ரூபாய்), தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஊழல் (சென்னையின் மையப்பகுதியில் அமைந்த 300 வீடுகள்) போன்ற பல ஊழல் வழக்குகளில் அதிகாரிகள் மீது வழக்கே தொடர முடியாததற்குக் காரணம் முதல்வர் தலைமையிலான குழுவின் அனுமதி கிடைக்காததுதான். அதுமட்டுமல்ல, பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு, மேற்படி முதல்வர் குழுவின் அனுமதி கிடைக்காததால் தண்டனையிலிருந்து தப்பிவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி மாலதி என்பவர்தான் தற்போது ஊழல் தடுப்புத் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்” என்ற கேலிக்கூத்தையும் போட்டுடைத்திருக்கிறார் உமாசங்கர்.
அவருடைய அனுபவத்தைப் படிக்கும்போதே ரத்தம் கொதிக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்திருந்த போதிலும் எல்லா அதிகார பீடங்களையும் துச்சமாகக் கருதி எதிர்த்து நின்ற அவரது துணிவும், எத்தனை முறை பந்தாடப்பட்டும் தளராத அவரது மன உறுதியும் வியக்கத்தக்கவை. அதிகார வர்க்கத்தில் இப்படி ஒரு மனிதரைக் காண்பது அரிதினும் அரிது. அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சும் இந்தக் காலத்தில், அதிகாரவர்க்கக் கோட்டையையும் ஆட்டமுடியும் என்று காட்டியிருக்கிறார் உமாசங்கர். அவ்வகையில் அவரது அனுபவம் ஒரு நேர்மறை எடுத்துக்காட்டு. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆகி மக்களுக்குத் தொண்டாற்றப் போவதாகக் கூறுவோரின் மடமையையும், ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமே சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் அதிகாரவர்க்கத்தை, மக்கள் தொண்டாற்றும்படி மாற்றியமைத்துவிட முடியும் என்று கூறுவோரின் கயமையையும் புரிந்து கொள்வதற்கு, உமாசங்கரின் அனுபவம் ஒரு எதிர்மறை எடுத்துக்காட்டு.
உமாசங்கரை பழிவாங்கிய அரசு எ(இய)ந்திரத்திற்கு...
ஸ்பெக்ரம் ஊழல்? - ஊ..ஊ..சந்துமுனையில சமரசம்..
கணவனுக்கு தண்டனையா? - ’கல்’இனத்தை துடைத்து அழிப்போம்..
காவல் தெய்வங்களை - கண்மூடி காதலிப்போம்..
தமிழக மீனவர்களா? - சரி..சரி.. தந்தி அடி..
அறிவு துளிர்க்கிறதா? - டாஸ்மார்க்கை கையிலெடு..
ஆங்கிலத்தில் தடுமாற்றம் - அடடா..சட்டம் மாற்றம்..
கேள்விகள் பிறக்கிறதா? - கடற்கரையில் படுத்துவிடு..
முதுமையில் சிகிச்சை? - முடிந்தவரை அனுப்பிவிடு..
முக்கல், முனங்கள் வந்தால்..
முக்காடு போட்டுவிடு..
தனிமனிதச்சுதந்திரமா? - தக்காளி போட்டுத் தள்ளு..
ஊழலுக்கு எதிரியா? - வீடு கட்டி போட்டுத்தள்ளு..
மனதில கேள்விகளா? - மாதர்(?) குஷ்புவை.. மகிழ்வுடன் மேடையேற்று..
ஊழலுக்கு இவன் தடையா? - குந்த விட்டு குண்%$#டி அடி..
கரம்சந்த் காந்தி.. இந்திரா காந்தி..
ராஜீவ் காந்தி.. சோனியா காந்தி..
ராகுல் காந்தி.. பிரியங்கா காந்தி(!)..
மிருகத்தை பாதுகாக்கும் ,அய்யோ.. நம்ம மேனகா காந்தி..
அய்யா காந்திகளும்..அம்மா காந்திகளும்..
உடன்பிறந்த மற்றும் பிறவா சகோதரிகளும்..
கருப்பு எம்.ஜி.ஆர்.. காடுவெட்டி மாமேதை..
வெள்ளை வேட்டி கட்டி..வீறாப்பா போராடும்..
மனிதர்களை மிருகமாக்கி, மந்தைகளாய்..... ஆக்கும் வரை..
ஓயாது பாடுபடும் ஓங்காரச்செல்லங்களே..
கும்பல்கள் கேட்கட்டுமே.. கும்மாளம் அடிக்கட்டுமே..
கூச்சல்கள் பல கண்டோம்.. குடும்பம்தான் எங்கள் (தொலை)நோக்கு..
வாழ்க ஜனநாயகம்.. வளர்க வாழும் கடவுள்கள்..
வாழையடி வாழையாக.. வளைந்தைபடி தோள் கொடுப்போம்..
ஊழலைய அம்பலமாக்கிய உமா சங்கருக்கு, பல தடைகள் வந்தாலும்..
உண்மை ஒரு நாள் வெளிவரும்..
அதுவரை மனிதனாய்... தோள் கொடுக்க விரும்பும்.. மனிதர்களே..
ஒன்றுபடுங்கள்..
செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010
அப்போ வெட்டிப்பயல் இப்போ உதவாக்கரை!
திங்கள், ஆகஸ்ட் 30, 2010
என்னுடைய முதல் சிறுகதை...
மழைத் தூறலை வெறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தான் குமரன். மழையை ரசிப்பது அவனுக்கு எப்போதும் ஆனந்தத்தைத் தரக் கூடியது தான், ஆனால் இன்றோ அவன் மனதில் எந்தவிதமான சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. காரணம் அவன் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் யோசனைகள் அவனை இக்காட்சியிலிருந்து விலக்கி தனியேவிட்டிருந்தது. அவனின் யோசனைக்கு காரணம் இதுதான். அவன் கட்டிக்கொண்டிருக்கும் அம்மன் கோவலின் பணிகள் ஆரம்பித்து நடந்துகொண்டிருக்கின்றன, உட்பிரகாரம் முடித்து விட்டாகிவிட்டது, இன்னமும் சாமி சிலைகள், மேல் கோபுரம், மற்றும் சுற்றுப்புற சுவர்கள் என்று பல வேலைகள் செய்யவேண்டியுள்ளது. அவன் கையிலிருந்த பணம், வீட்டிலிருந்த நகைகள் மற்றும் அக்கம் பக்கத்தில் நண்பர்களிடம் வாங்கிய நன்கொடைகள், சொந்தக்காரர்கள் மற்றும் பங்காளிகளிடம் வாங்கிய நன்கொடைகள் அனைத்தும் சேர்த்தால் கூட கோவில் பணிகளுக்கு பற்றாத சூழ்நிலை. இந்நிலையில் அவனின் பால்ய சிநேகிதன் சந்திரனின் மகளுக்கு பொறியியல் கல்லூரியில் சேர்க்க பணம் வேண்டும் என்று நடையாய் நடந்து கொண்டிருக்கிறான். குமரனும், சந்திரனும் சிறு வயதிலிருந்தே நல்ல நண்பர்கள். குமரன் மேற்படிப்பை முடித்து விட்டு சிறிது வருடங்கள் துபாயில் இருந்து சம்பாரித்து கொண்டு இங்கு செட்டிலாகிவிட்டான். சந்திரன் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, படிப்பையும் மேற்கொண்டு தொடர முடியாமல், கிடைத்த வேலைகளுக்குச் சென்று, ஏதோ வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றான். சந்திரன் எப்படியாவது தன்னுடைய பெண்னை பொறியியல் பட்டதாரியாக்கிவிடலாம் என்று முனைப்புடன் இருக்கிறான். ஆனால் என்ன செய்ய, போதிய பணம் இல்லையே? இப்போதெல்லாம் வங்கியில் கல்விக் கிடைப்பது எளிது என்று சொன்னாலும், அதை வாங்குவது அவ்வளவு எளிதில்லை என்பதை சந்திரன் நன்கு உணர்ந்திருந்தான். சந்திரனுக்கு அவ்வளவு பெரிய தொகையைக் கட்டி மகளைப் படிக்க வைக்கும் அளவிற்கு வசதியில்லையென்றாலும் அவளை எப்படியாவது நன்றாக படிக்க வைத்துவிடவேண்டும் என்ற வைராக்கியத்தோடுதான் இருந்தான். காரணம், தான் படிக்காததால் பட்ட கஷ்டங்களை தன்னுடைய மகளும் அனுபவிக்க விரும்பவில்லை. தானும் படிக்காமல் தன்னுடைய மனைவியும் படிக்காததால் சமூகத்தில் அவர்கள் ஒதுக்கப்பட்டிருந்ததுதான் காரணம். என்னால் இப்போதைக்கு எந்த உதவியும் செய்ய முடியாது, கோவில் திருப்பணிகளுக்கு வேறு பணம் பத்தாது இன்றும் 10 நாள் வேலைக்கு மட்டும் தான் பணம் உள்ளது, மீதிப் பணத்தை இனிமேல் தான் வசூல் செய்ய வேண்டும், அதற்கே எனக்கு நேரமில்லை, பிறகு பார்க்கிறேன், என்று சொல்லி அவர்களைத் தற்போது திருப்பி அனுப்பிவிட்டுத் தான் வந்திருக்கிறான். இது தான் குமரனின் எண்ணத்தில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ண அலைகள். கோவில் திருப்பணிகளை எவ்விதம் துரிதமாக முடிப்பது என்பது பற்றியே அவனுக்கு எண்ணங்கள் உலவிக் கொண்டிருந்தது.
கோவில் காரியம் விரைவில் நடக்க வேண்டும், தன் நண்பனின் அவ்வாறு பேசிவிட்டோமே என்ற குற்ற உணர்வுக்கும் இடையே சிக்கி திணறிக் கொண்டிருந்தான். எல்லாவற்றிற்குமே சீக்கிரமே வழி பிறக்கும் என்று எண்ணிக்கொண்டு எழுந்த வேலையில், காலாற சற்று தூரம் நடந்து வரலாம் என்று தோன்றியது, அப்படியே அவனுடைய பால்ய சிநேகிதனைப் பார்த்து தன் கோவில் திருப்பணிக்கு ஏதாவது நன்கொடை கேட்டுக் கொள்ளலாம் என்று தோன்றவே, இரசீது புத்தகங்களுடன் ஒரு பையை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
சிறது தூரம் நடந்திருப்பான் சற்றே தொலைவில் தெருவுக்குள் ஏதோ சலசலப்பு கேட்கவே சற்று உற்று நோக்கினான், சரி அருகில் சென்று பார்கலாம் என்று சிறிது தூரம் நடக்கையில், முரடனைப்போலிருந்த ஒருவன் ஒரு பெண்ணை அவசர அவசரமாக ஒரு ஆட்டோவில் இரண்டு கையாலும் தூக்கி உள்ளே இருந்தவர்களிடம் கொடுத்தான், பின்புறமாக நின்று கொண்டு ஒரு பெண் தலையிலடித்துக் கொண்டு அழுவதும், அவள் வீட்டுக்குள் கையை நீட்டி, கையாலாகவதன் உனக்கெல்லாம் எதுக்குடா பொண்டாட்டி பிள்ளை, பெத்த ஒன்னயும் இப்படி படுக்க வச்சுருக்கியேடா, நீயெல்லாம் உருப்புடுவியா, என்று ஏகவசனத்தில் அடுக்கிக் கொண்டிருந்தாள், இதையெல்லாம் பார்க்கும் போது அங்கே ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்பது மட்டும் புரிந்தது. என்னவென்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் சென்று விசாரித்ததில், இப்போது ஆட்டோவில் கொண்டும் செல்லும் பிள்ளைக்கு வயது 17 தான் ஆகிறதாம். +2வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளதாம், அப்பெண்னுக்கு மருத்துவப்படிப்பில் சேர ஆசையாம், ஆனால் அவனுடைய அப்பன் சரியான குடிகாரன், எப்போதாவது தான் வேலைக்குச் செல்வானாம், அப்படியே வேலைக்குச் சென்றால் திரும்பும் போது சண்டை சச்சரவுகளுடன்தான் திரும்புவானாம், மீதி நாட்களில் வீட்டிலேயே இருந்து கொண்டு, அவன் மனைவியுடன் சண்டையிட்டுக் கொண்டும், அதை யாராவது கேள்வி கேட்டால் அவர்களையும் நா கூசாமல் அசிங்கமாகப் பேசுவதும் வாடிக்கையாகிவிட்ட விசயம். அதனால் அவன் இருக்கும் பக்கம் கூட அந்த ஏரியாவாசிகளின் நடமாட்டம் குறைவுதான். அப்படியிருக்க அந்த குடிகார தகப்பன் தன் மகளை மேற்கொண்டு படிக்க வேண்டாம், நான் சொல்கிற ஆளைக் கல்யாணம் செய்து கொண்டு கிளம்பற வழியப்பாரு, இல்லையென்றால் உன்னை நானே கொன்றுவிடுவேன் என மிரட்டி அப்பெண்னை அடித்து உதைத்தானாம், அதனால் அப்பெண் இன்று காலையில் விஷம் குடித்துவிட்டாளாம், என அங்கிருந்த பெருசு ஒன்று அத்தனை கதைகளையும் சொல்லிமுடித்தது, கேட்கவே மனதுக்கு கஷ்டமாக இருந்தது, இது மாதிரியான விசயங்களை பேப்பரில் படித்திருக்கிறேன் இன்று தான் நேரில் கண்ணெதிரே பார்க்கும் சந்தர்ப்பம், ஏற்கனவே மனதில் உள்ளவற்றை தீர்க்க முடியாமல் அலையும் எனக்கு, மேலும் இன்னொன்றா? ஆண்டவா என்ன மனிதர்களடா! என எண்ணத் தோன்றியது. சரி திரும்பி வந்தவழியே நடந்து கொண்டிருந்தபோது, அப்போது சென்ற ஆட்டோ திரும்பிவருவதைக் கண்ணுற்று நின்றேன், ஆட்டோவில் இருந்து இறங்கியவன் கண்ணைத் துடைப்பதும், அங்கு நின்றிருந்த பெண்ணிடம் ஏதோ சொல்ல, அவள் தலையில் பெரிதாய் அடித்துக் கொண்டு அழுது, தரையில் விழுந்து உருண்டதைக் கண்டதுமே, எனக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. அவ்விடத்திற்கு மீண்டும் விரைந்தேன். பாவம் கொண்டு செல்லும் வழியிலேயே அப்பெண் மரணத்தை தழுவியிருக்கிறாள், தனியார் மருத்துவமனையில் உறுதிசெய்து கொண்டு, உடனே வீட்டிற்கு திரும்ப கொண்டுவந்துவிட்டனர்.
“இப்போ அழுது என்ன பிரயோசனம், அந்த பிள்ளை படிக்கிறேன், பெரிய டாக்டரா வரனும்னு சொன்னப்ப கேட்கலையே, இப்ப ஏன்டா அழறே! போயா போயி எங்களுக்கும் விசத்தை கொண்டு வா! இப்படி உங்கிட்ட தெனமும் செத்து செத்து பொழைக்கறதுக்கு ஒரேடியா எம்மவ கூடயே நானும் போயர்றேன்”, என்று அங்கு நின்று அழுதுகொண்டிருந்த தன் குடிகாரக் கணவனைக் கேட்டுக்கொண்டிருந்தாள் மகளை இழந்த தாய், உண்மைதானே! இருக்கும் வரை நாம் எதையும் நினைத்துப் பார்பதில்லை, அது நம்மை விட்டு அகன்றவுடன் ஒரு நிர்வாணம் நம்மை சூழ்ந்துகொள்கிறது. வாழும் காலத்தில் மதிக்கப்படுவது, போற்றுதலுக்குரியது. இப்படி கண்முன்னே இருக்கும் மனிதர்களை உதாசீனப்படுத்திவிட்டு, நாம் மட்டும் நிம்மதியாக இருக்க வேண்டும், நம்முடைய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொள்ளவேண்டும் என்று நினைப்பது எவ்வளவு பாவச் செயல்! படிப்பைத் தொடர முடியாமல் உயிரை விட்ட அப்பெண்ணை நினைத்து வருந்தினேன்.
குமரனுக்கு இப்போது மனதில் எண்ண அலைகள் இல்லை, மனத்தாங்கல்கள் இல்லை, எங்கேயோ பெய்த மழையின் காற்று வீசத் தொடங்கியதைக் உணர்ந்தான், சற்று நேரத்திற்கு முன்பு வரையிலும் அவன் மழையில் தான் குடை பிடித்தபடி நடந்து வந்து கொண்டிருக்கின்றான், ஆனாலும் அந்த உணர்வுகளே இல்லாமல். இப்போது மழைக்காற்று அவனுக்கு ஏதோ ஒன்றை உணர்த்துவது போலிருந்தது. சே! எவ்வளவு சுயநலமாய் இருக்க பார்த்திருக்கிறோம். தன் நன்பன் உதவியென்று வந்து அதுவும் தன் மகள் படிப்பதற்காக பணம் கேட்டதற்கு மறுத்திருக்கிறோமே, என்ற எண்ணம், அவன் மனதில் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தியது. உடனே வீடு திரும்பி தன் நண்பனை அழைத்து அவன் மகளுக்கு பண உதவி செய்ய வேண்டும் என உறுதியுடன் நடந்தான்.
இப்போது அவன் மனதில் எவ்வித குழப்பமும் இல்லை. மழைவிட்ட பின் தோன்றும் தெளிவான வானத்தைப் போலிருந்தது. அவன் மனதிலிருந்த பாரம் குறைந்து லேசாகியிருந்தது. தான் கட்டவிருக்கும் கோவிலின் அம்மன் அவன் மனதில் வந்து காட்சியளித்துவிட்டுப் போனாள். மாதா, பிதா, குரு, பிறகுதான் தெய்வம் என்று உணர்த்துவதைப் போலிருந்தது. கல்விக் கூடங்களே, இறைவனின் ஆலயங்கள். கல்வி கற்போருக்குச் செய்யும் உதவி, ஆண்டவனுக்கு நேரடியாகச் செய்யும் சேவையைப் போன்றது. தான் செய்யும் இக்காரியத்தால் கோவில் பணிகள் சிறிது தாமதம் ஆகத்தான் செய்யும், ஆனால் எப்படியும் சிறப்பாக நடந்தேறிவிடும் என்று நம்பிக்கையுடன் நடந்தான்.

